Monday, October 18, 2010

Pakkathil kadan Vaangiyathu



கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!

நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!

பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்

உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!

உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்

உனக்கு இன்று
பிறந்தநாள்…

வாழ்த்தவில்லை..

மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!

கவியரசு
கண்ணதாசன் பிறந்தநாளுக்கு எழுதியது
-ரசனைக்காரனிடம் கடன்வாங்கியது

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails