Wednesday, December 31, 2008

நான் கடவுள் Official Trailor



பாலாவின் நான் கடவுள் Official Trailor

யார் முதலில் சொல்வது..?




காதலை யார்
முதலில் சொல்வது
என்ற தயக்கத்தில்..இன்னும் நாமிருவரும்!

அம்மா! என்று
உன் கன்னத்தை கடித்து
உன் கனவை திறந்தான்
நம் சுட்டி மகன்!

அடிக்கடி
என்னை முந்திக்கொள்கிறான் அவன்!
என்ற பொறாமையில்
நான்..நிஜத்தில்!

(இன்றைய கனவில் என் எதிர்கால வாழ்க்கை !)

Tuesday, December 30, 2008

Wishing u a very happy new year!

From Colourthendral's Unnarthathai Sollukiraen!

Monday, December 29, 2008

கடைசியாக..நான் கடவுள்!



என் மசாலா ரசனைகளுக்கு சிவாஜி, வாரணமாயிரம், பில்லா, போக்கிரிகள் வந்தாலும்..

உணர்வுகளை உரசும் உலக சினிமா தரவரிசையில் தமிழில் வெகு சில சினிமாக்கள் தான் வரும்..அது வெற்றிகரமாக ஓடுதோ இல்லையோ அது கண்டிப்பாக பலரை அதன் உணர்வு குவியல்களில் சிக்கவைத்து பிரமிப்பூட்டும், அதற்காகவே இது போன்ற படங்களுக்கு நான் காத்திருப்பதுண்டு.. அந்த வரிசையில்...மூன்று வருடமாக...அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனர் பாலாவின் ரசிகரான நானும் தான்..

படம் : நான் கடவுள்!




என் காத்திருப்புக்கு மூன்றே மூன்று காரணங்கள் தான்..

உணர்வுகளை காட்சிகளாய் பதிவும் செய்யும் பாலாவின் இயக்கம்..

ஜெயமோகனின் ஏழாவது உலகமெனும் இலக்கிய நாவலின் ஒரு பகுதியை அவருடைய அனுமதியுடன் பாலாவே திரைகதையாய் எழுதி, அதற்கு வாசம் சேர்க்க வரும் வசனங்களை, இலக்கிய உலகின் இந்நாள் பெரிய நம்பிக்கையான ஜெயமோகனையே முதன் முதலில் திரைத்துறைக்கு அழைத்து வந்து எழுதவைத்தது!

உயிரையே மீண்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இசையின் ஆதிமூலம்
இளையராஜாவின் இசை..

இங்கு மட்டுமில்லை இந்தியில் ஆமிர் கான், அபிஷேக் பட்சான் முதல் பலரும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க தவம் கிடக்கிறார்கள்.. அஜித்துக்கு பாலா செய்தது துரோகம் தான்.. கமல்ஹாசனின் வாரிசாக அஜித்தை இந்த படம் மாற்றி இருக்கும்.. யார் கண் பட்டதோ... ஆர்யாவுக்கு அடித்தது யோகம்.. இந்த படத்திலும், இனிமேல் நடிக்க போகும் படத்திலும் அர்யவிடமும் நடிப்பை எதிர்பார்க்கலாம்..

கதை..நாம் வாழும் இந்த சமுகத்தில் கடைசி மனிதர்களாக வாழும் .. பிட்சைக்காரர்களின் உரையவைக்கும் உலகத்தை பற்றியது தான் கதை. 'எழாவது உலகம்'..நாவல் முழுவதும் படமாக எடுக்க முடியாது...நாவலை படிக்க படிக்க கனத்து விடும் மனசு.. படித்தவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.அதனில் ஒரு பகுதியை கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக கதையை காசி(வாரனாசி)யில் ஆரம்பித்து தமிழகத்துக்கு பயணம் செய்கிறது பாலா எழுதிய நான் கடவுள். அதுவும் பாலாவின் பதிவுகளை சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக காட்சிக்கு காட்சி பதற வைக்கும்...

இசைஞானி படத்தை பார்த்து அழுதே விட்டாராம்.. பின்னணி இசையில் தற்போது உயிரூட்டி கொண்டு இருக்காராம்..

தேசியவிருதுகளின் இலக்கில் ...
பொங்கலுக்கு..
என் அண்ணாச்சி பாலாவின் நான் கடவுள்!

Tuesday, December 23, 2008

கிருஸ்த்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

From post cards


அன்புடன்,

கலர் தென்றல்!

Sunday, December 21, 2008

Yaar thadupaargal | யார் தடுப்பார்கள்?!




யுத்தம் செய்ய
உலகம் தடுக்கலாம்!

நாம் முத்தம் செய்ய
யார் தடுப்பார்கள்?!


(நம் வருங்கால கனவு டூயட்டின் பாடல் வரிகள் இது!)

ஏன்...இப்படி பார்த்தே..?



ஏன்...?
இப்படி பார்த்தே..!
என்னை சாக அடிகிறாய்..?

வரம் வாங்கி
மறுபிறவி எடுத்துவந்தாலும்..
என்னை தொடர்கிறது...
உன் பார்வை!

இதய குறிப்பு!:
எனக்கும் சந்தோசம் தான் அடிக்கடி இப்படி சாவதில்!

மயக்கம்!



நீ என் இசையில் மயங்குகிறாய்!
நான் உன்னில் மயங்குகிறேன்!
நம் வாழ்க்கை காதலில் மயங்குகிறது!

என் ஜாதகத்தில்...




என் ஜாதகத்தில்...
ஜென்ம சனி வந்து இருக்கிறதாம்!

அதுவும் ஜென்ம சனியில்..
காதலாம்!

உணர்ந்தேன்...
நீ என்னை பார்த்தபோது!

உன் ஜாகத்தை
பார்க்கச் சொல்!
..நான் வந்து இருப்பேன்!

பரிகாரம்:
உடனே நம் கல்யாணத்தில் தானாம்!

ஒளியிலே தெரிந்தது..!





இந்த படம் தான்!, என்னை மீண்டும் புகைபடங்கள் எடுக்க தூண்டியது. சிறுவயதில் தெரியாத்தனமாய் பள்ளியில் ஆந்திர மாநிலத்தின் சிறுவர்களுக்கான சிறந்த பரிசு பெற்ற ஒரே நம்பிக்கைதான், மற்றபடி அதன் தொழில் நுட்பம் எதுவுமே எனக்கு தெரியாது என்பதே என் மனதின் உண்மை. இருந்தாலும் இதன் மேல ஆசை வளர்ந்தது!

புதுமையாக இத்துறையில் எதாவது செய்யலாம் என்கின்ற அதிகபிரசங்கித்தனம் எல்லாம் இல்லாமல், முதலில் எல்லோரும் பார்த்து பழகிய படங்களை எடுத்து பார்போம் என்றே ஆரம்பித்தேன், என் ஒளியின் பயணத்தை. அதற்கு சாட்சிள், இன்னும் என் பழைய பயணக்குறிப்புகள் அழிக்க படாமல், அப்படியே என் flickr தளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு படமும் இன்னொரு தளத்திற்கு என்னை கொண்டு சென்றது, நான் ஒழுங்காக அப்போதாவது ஒளிப்பதிவை கற்று கொள்வேன் என்று, இல்லை என்று சொல்லும் அப்பாவி மக்கு மாணவனாக தான், இன்றும் நான்.

என்னை எப்படியாவது, இந்த துறையில் பெயாரெடுக்க வைக்க வேண்டும் என்று என் நண்பர்கள் மற்றும் என் விமர்சகர்கள் இன்னும் அரும்பாடுப்படுகிறார்கள்.. பார்போம் என்று எதிர்காலத்தை நோக்கி நானும், என் காமெராவும்...

Saturday, December 20, 2008

பார்த்தேன்! ரசித்தேன்!!




ஆமீர் கான் நடித்து வரும்வாரம் வரவிருக்கும் ஹிந்தி கஜினியின் புது Trailor.. மற்றும் வேறு சில promo காட்சிகள்..

கஜினியின் புது Trailor..



promo காட்சிகள்..



..எழுதினேன்! ..(பதிவு எண் 4)



எங்கள் நட்புகுகளை..
எங்கள் மொழிகளை..
எங்கள் மதங்களை..
எங்கள் வாழ்கையை..

இணைக்கும்
எங்கள் இந்தியா..

என்று சாதிக்க வேண்டும் மென்றால்..?

இதற்கு ஒரே treatment
கட்டிப்புடி வைத்தியம் தான்!



நன்றி AR ரஹ்மான்.. 'Jiya Se Jiya' பாடல்.... Connections ஆல்பத்திலிருந்து...
(AR ரஹ்மானின் Connections என்கிற இந்த இசை ஆல்பத்தை நோக்கியா மொபைல் நிறுவனமும் பாரத்பாலா நிறுவனமும் இணைந்து தாயரித்துள்ளது.

'Jiya Se Jiya' என்பது தான் Connections ஆல்பத்தின் ஒன்பது பாடல்களில் முக்கியமான தாளம் தட்டும், இதயத்தை உணர்வோடு சேர்த்து கட்டும் , நட்பின் ஆழத்தை உணர்த்தும் பாடல். இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவின் Juan Mann's Free Hugs( இலவசமாக கட்புடிச்சுக்கலாம்) பிரச்சார அமைப்பின் தத்துவங்களின் அடிப்படையில், இந்தியா முழுவதும் நிறைய பேரை கட்டிபுடிக்க வைத்து படமாகியுள்ளார் இதனை இயக்கிய கனிகா மயர். இது தற்போது இந்தியா மட்டும்மள்ளாது youtube லும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது!)

Friday, December 19, 2008

..மயங்கினேன்..சொல்ல தயங்கினேன்!




நான் மயங்குகின்ற காதல் கண்கள்!
எனக்கு சொந்தமான
அதே கண்கள்!
பாகம் 2!

Thursday, December 18, 2008

..எழுதினேன்! ..(பதிவு எண் 3)



காதல் திருமணங்கள்..
சுயநலம்..(பெற்றோர்களின் பார்வையில்)!

Arranged Marriage..
பொதுநலம்..(சமுகத்தின் நாடகத்தில்)!


(யாரோ சந்யாசி எழுதி வைத்த டைரியில் களவாடியது)

திருஸ்டி கழிந்தது....



குசேலன் குழப்படி மூலம் TRP கிடைத்ததில், அதிகம் லாபம் பார்த்த சன் டிவி குழுமம் இன்று சூப்பர்ஸ்டார் நடிக்கும் மற்றும் ஷங்கரின் கனவு படமான எந்திரனை தயாரிக்கிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது . உப்புமா படத்திற்கேல்லாம் அதிகமாகவே பாலிஷ் போட்ட சன் டிவி.. இன்று, பிரமாண்டமான பாலிஷ் இயக்குனருடன் இணைந்து இருக்கிறது. சந்தோஷம்..ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் சன் டிவி குழுமம் தயாரிப்புக்கு முதல் சந்தோஷ வெற்றி இது தான். கலைஞரின் உண்மையான வாரிசு என்றால் நான் தான் என்று மீண்டும் நிருபித்த கலாநிதி மாறனின் முதல் திரையுலக வெற்றி..

சூப்பர்ஸ்டாருக்கும் இது தந்திர வெற்றி தான்.. சண்டைகாரனை காலில் விழ வைத்தது.

மொத்தத்தில் சன்னின் திருஸ்டி சூப்பர்ஸ்டாருக்கு கழிந்தது இனிமேல் சூர்யநட்சத்திரமாக திகழ்வார் என்று கோடம்பாக்கம் ஆரூடம் சொல்கிறது..

என்றும் அன்புடன்
ரஜினி வெறியன்

Wednesday, December 17, 2008

..எழுதினேன்! ..(பதிவு எண் 2 )



பிரார்த்தணைகளும் பிட்சைகளும்
தமிழனுக்கு தேவை இல்லை..

கேட்டு பெறுவது பிட்சை
அடித்து பெறுவதே உரிமை..

என்கிற வரலாற்றின் வெற்றி சூத்திரம் தான்
தமிழ் ஈழத்தை வென்றடுக்கும்..

அடி விழ ஆரம்பித்துவிட்டது..

எங்கள் அன்பும் ஆதரவும்
எப்போதும் உங்களுக்கு தான்..

உங்கள் உறவென நினைக்கும்
.. தமிழகத்தின் தமிழன்!

..எழுதினேன்! ..(பதிவு எண் 1 )



தோழி காதலியானால்..
அது புத்துணர்வு..

காதலி தோழியானால்..
அது குற்றவுணர்வு..

என் இசை மனதில் இன்று..

தெலுங்கு படமான "கிங்" மற்றும் நமது தமிழில் வரவிருக்கும் "என்னை தெரியும்மா" படங்களின் பாடல்கள் தான் என் Winampல் தற்போது சுழல்கிறது.. அதனை உங்களுக்காக இங்கே!



படம்...தெலுங்கு "கிங்" ....நடிகை மம்தா மோகன்தாஸ் பாடியது
என்னை அடிமையாக்கிவிட்ட குரல்..



படம்...தெலுங்கு "கிங்" ....பாடகி உஜ்ஜைனி பாடியது


"என்னை தெரியும்மா" படத்தில் நடிகர் சிம்பு பாடியது



பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியது

Sunday, December 14, 2008

முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



(சத்தியமா இவை கவிதைகளே அல்ல ... )

நான் இங்கு எழுதியவைகள்
அனைத்தும்
கண்டிப்பாக கவிதைகள் அல்ல
காதல் தலைக்கேறிய பித்தம் தான்
உணர்ந்ததை மறைமுகமாக
உளறி இருக்கிறேன்..

பல இடத்தில் கவிதை என்று சொல்லி இருந்தாலும்
அவையனைத்தும் அடுக்கு மொழி வசனங்கள் தான்!



முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



முதல் நாள் நினைதவை
கனவில் வரும் என்று
Sigmund freud சொல்லி இருக்கிறார்

முன்பு எங்கோ படித்தவை
இன்று இங்கு கவிதையாய்
வந்து இருக்கலாம்
அதை நான் மீண்டும் எழுதி இருக்கலாம்
என் மொழியில்..

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இவற்றை ஏற்கனவே இயற்றிய கவிஞர்களே!

கவிதை எழுதுவதே
காதலை கடத்துவதற்கான
எளிய வழி என்பதனால்!

காதல்..



வரமிருந்து நீயும் நானும்
வாங்கிய
சந்தோஷ சாபம்!

பழைய காதல் recycle ஆகியது



பழைய காதல்
இது
என் கால குப்பைதொட்டியில்
recycle ஆகும்
என்ற நல்ல நம்பிக்கைய்யில்
மீண்டும் ஒரு அழகான குழப்பதை
காதலிகின்றது
என் வாழ்க்கை!

கடைசியாக பைத்தியம் பிடித்தது..




தேடல் இல்லா தெருவில்
பயணித்து கொண்டு
இருந்த நான்
தெரியாத்தனமா கோவிலுக்கு வந்தேன்...

அழகு பைத்தியமாய் நின்று
கொண்டு இருந்தாய்
உன் அம்மா துணையுடன்..

உன்னை முதன்முதலில் பார்த்தபோது
பரிதபமாக
என் உள்ள தட்டில்
உன் ஏஞ்சல் இதயத்தை
பிச்சையிட்டு சென்றாய்!

வந்த வரை லாபம்
என்ற எண்ணத்தில் இருந்தேன்..
உன் இதயம் வந்த நேரம்
உன் பைத்தியம்
என்னையும் பிடித்துவிட்டது
நின்ற இடத்திலேயே நின்றேன்
பைத்தியமாக....
உன் கிறுக்கு பிடித்த இதயமாக!

வேண்டுதலோ என்று
அய்யர் தவறாக
நின்னைத்து விட்டார் போலும்
அம்மன் குங்குமம்
நெத்தியிலே பூசி விட்டார்..

hmmm hmmm தெளியவே இல்லை
அவர் கோயில்லை
பூட்டி கொண்டுயிருந்தார்..
நான் வெளியில் வந்தேன்
கடைசியாக
உன் பைத்தியமாக!

காதல் நிலவரம் தற்போது..




தூரத்திலிருந்தே
பல வருடமாக பேசிக்கொள்கிரோம்
நாம் இருவரும் அடிக்கடி உள்ளங்களை
மாறி மாறி களவாடியும் வருகிறோம்
கண்களின் வாயிலாக....

உன் கண்கள் என்னை
நிராகரிக்கவில்லை என்றாலும்
பயமாகத்தான் இருக்கிறது
ஆறு காதல் கல்யாணங்கள்
செய்துவைத்த இந்த
தமிழ் மறவனுக்கு!

எனக்கு தைரியம் வரும்போது எல்லாம்
உனக்கு காலேஜ் பஸ் சீக்கிரம்
வந்து விடுகிறது
என்ன செய்ய....
இன்று பொய் நாளை வருகிறேன்
என்று தினமும்!

உண்மை நிலவரம்..




காதலை சொல்ல
பூக்கள் தேவை இல்லை
என் கண்களே போதும்
பட்ஜெட் பற்ற குறை தான்....

Light டா ஐஸ் வச்சு இருக்கேன் உனக்கு....




காதலியை பார்த்தவுடன்
கவிஞர்களுக்கு தான்
கவிதை எழுத வருகிறது...

உன்னை பார்க்கும் பொது
எனக்கு அப்படி ஒன்றுமே
வருவதில்லை மாறாக

நிறைய காசு தான் வருகிறது
ஓ! நீ மகாலக்ஷ்மி என்பதாலோ!

ஜில்லென்று ஒரு நக்கல்....

எனக்கு மழை நாட்களில்
நனைவது என்றால்
கொள்ளை ப்ரியம்!
“மழையில் எருமை மாடு மாதிரி
நனைந்து வருகிறாயே” என்று அடிக்கடி
அம்மா திட்டுவாங்க அப்போது..
சந்தோஷத்தில் சிரித்துக் கொள்வேன்!

இப்போதும்...

அப்படி தான் சிரித்துக் கொள்கிறேன்
சாதரண நாட்களில் கூட
மாலை நேரத்தில்
காலேஜ் பஸ்சில் இறங்கி
நீயும் அது போல
அசைந்து வருவதை கண்டு!

என் மாண்புமிகு காதலி ..

அமைதியாகவே எனை
மெல்ல மெல்ல
அடிமை செய்துவிட்டாய்
நானும் உன் ஆக்கிரமிக்கும்
கண்களுக்கு
சமாதி நிலை அடைந்து நிற்கிறேன்..

எதற்காக...

தேவதையின்
(Kate winslet போன்ற)
Lipstick போடாத
சிவப்பு இதழ்கள்
என் காதை குறும்பாக கடிக்கும் போதும்
என் இதழ்களின் ஆக்கிரமிப்பை
அடாவடியாக மறுக்கும் போதும்
உன் சேட்டை செய்யும்
முத்தத்திற்க்காகவே
எத்தனை வருஷமெல்லாம்
காத்தியிருக்றேன் என்று
அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்
ஜட்டி போட்ட
என் அக்காவின் குட்டி மகளுக்கு!!





Saturday, December 13, 2008

அக்காள் மகள்கள்....

எனக்கு அடிக்கடி
கடன் கொடுக்கும்
என் அக்காள் மகள்கள்

செல்லங்களை மறக்க முடியும்மா!!

அதற்காக
அவர்களின் பாதமலர்களை
தொட்டு வணங்குவதுமுண்டு..

வழிபாடுகள் தொடர்கின்றன..

..உணர்ந்ததைச் சொல்கிறேன்!!



என் வாழ்க்கையில்
நான் கடமைப்பட்டு இருக்கிறேன்
என்றால் அது
என் நண்பர்களுக்கு* தான்

தறுதலையாய் திரிந்த என்னை சரியான தடம்
நோக்கி பயணிக்க வைத்தவர்கள் அவர்கள்!

வெற்றி, தோல்வி, சந்தோசம், துக்கம் இவை
அனைத்தையும் தாண்டி என்னை தங்கள்
உள்ளத்தில் அணைத்து சுமந்து கொண்டு இருப்பவர்கள்..

நான் என் வாழ்க்கையை வாழ்வதும்
அவர்களுக்கு தான்..

என் நன்றியை அவர்களுக்கு
என் வாழ்க்கையில் சொல்கிறேன்..
இது தான் என் உண்மை..
நான் உணர்ந்ததைச் சொல்கிறேன்

என்றும் அன்புடன்..
இளையராஜா வேலுச்சாமி

நண்பர்கள்* ( இதில் என் அக்காக்கள், அண்ணன்கள், தம்பிகள் மற்றும் தங்கைகளும் அடங்குவர்)

Related Posts with Thumbnails