Sunday, December 14, 2008

முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



(சத்தியமா இவை கவிதைகளே அல்ல ... )

நான் இங்கு எழுதியவைகள்
அனைத்தும்
கண்டிப்பாக கவிதைகள் அல்ல
காதல் தலைக்கேறிய பித்தம் தான்
உணர்ந்ததை மறைமுகமாக
உளறி இருக்கிறேன்..

பல இடத்தில் கவிதை என்று சொல்லி இருந்தாலும்
அவையனைத்தும் அடுக்கு மொழி வசனங்கள் தான்!



முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



முதல் நாள் நினைதவை
கனவில் வரும் என்று
Sigmund freud சொல்லி இருக்கிறார்

முன்பு எங்கோ படித்தவை
இன்று இங்கு கவிதையாய்
வந்து இருக்கலாம்
அதை நான் மீண்டும் எழுதி இருக்கலாம்
என் மொழியில்..

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இவற்றை ஏற்கனவே இயற்றிய கவிஞர்களே!

கவிதை எழுதுவதே
காதலை கடத்துவதற்கான
எளிய வழி என்பதனால்!
Related Posts with Thumbnails