Saturday, December 13, 2008

..உணர்ந்ததைச் சொல்கிறேன்!!



என் வாழ்க்கையில்
நான் கடமைப்பட்டு இருக்கிறேன்
என்றால் அது
என் நண்பர்களுக்கு* தான்

தறுதலையாய் திரிந்த என்னை சரியான தடம்
நோக்கி பயணிக்க வைத்தவர்கள் அவர்கள்!

வெற்றி, தோல்வி, சந்தோசம், துக்கம் இவை
அனைத்தையும் தாண்டி என்னை தங்கள்
உள்ளத்தில் அணைத்து சுமந்து கொண்டு இருப்பவர்கள்..

நான் என் வாழ்க்கையை வாழ்வதும்
அவர்களுக்கு தான்..

என் நன்றியை அவர்களுக்கு
என் வாழ்க்கையில் சொல்கிறேன்..
இது தான் என் உண்மை..
நான் உணர்ந்ததைச் சொல்கிறேன்

என்றும் அன்புடன்..
இளையராஜா வேலுச்சாமி

நண்பர்கள்* ( இதில் என் அக்காக்கள், அண்ணன்கள், தம்பிகள் மற்றும் தங்கைகளும் அடங்குவர்)

Related Posts with Thumbnails