Tuesday, December 22, 2009

Aayirathil oruvan trailor

செல்வராகவனின் மூன்று வருட உழைப்பில் வரவிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் திரை முண்ணோட்டம்.பார்த்திபன், கார்த்திக் சிவகுமார், ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வரலாம்? என எதிர்பார்க்கப்படுகிறது.


Saturday, November 07, 2009

Ameer's Yogi Trailor | அமீரின் யோகி.. சிறப்பு திரை முண்ணோட்டம்.

Saturday, October 24, 2009

matha matha katha katha|மத மத..கத கத..



மத மத..ன்னு அவ..
கத கத..ன்னு நான்..
ம..மதம் பிடித்த
க..கலவரமான காதல்..

New Hindi Trailors..

வடஇந்திய இளைஞர்களின் இளமை எதிர்பார்ப்புகளை அள்ளிக்கொள்ள வரும், பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் புதிய படம் தான் "அஜப் பிரேம் கீ காசாப் ககாணி(Ajab Prem Ki Ghazab Kahani)"..இளமைக்கு கத்ரீனா வும், ரன்பீர் கபூரூம் உத்தரவாதமாம்.






"குர்பான்"



கரீனா கபூர், ஸைப் அலிகான் ஜோடியுடன் விவேக் ஒபொராய் நடித்து விரைவில் வர இருக்கும் குர்பான் படத்தின் trailor.. என்னை சமீபத்தில் ஈர்த்த ஒரு போஸ்டர் இந்த படத்துனுடையது தான்..

Ameer's Yogi Preview

இயக்குனர் அமீர் திரைக்கதை, வசனம் எழுதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, யுவன் அழகான இசையில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் "யோகி" படத்தின் புகைப்பட முண்ணோட்டம். அமீரின் இந்த இரண்டு வருட உழைப்புக்காக தமிழ் திரைத்ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்..

Goa trailor

வெங்கட் பிரபு இயக்கத்தில் மூன்றாவது படைப்பான, கோவா படத்தின் பிரத்தேயக முண்ணோட்டம்.

Go என்பது முன் வார்த்தை தான், வா என்பது பின் வார்த்தை தான்..
Go என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை..

ஜாலியான கருத்து செறிவு [:D]!!

Monday, June 29, 2009

seekiram||சீக்கிரம்!!


எவ்வளவு  நேரம்மடி
இம்சையரசி
என் இதழ் பக்கம் மௌனவிரதம் இருப்பாய்..
சட்டென்று விரதத்தை முடி..
மொத்தத்தில்..
முத்தத்தில்.. எனக்கு
மோட்சம் கொடு.. சீக்கிரம்! !

nanainthaen||நனைந்தேன்?


அழகாக நீ அணைத்ததில்
இதமாக நனைந்தேன்
உன் முத்த மழையில்?!
சரியாக ஞாபகமில்லை
எங்கே இன்னொரு முறை
எனக்காக!

my symphony|| என் சிம்போனி


நான் இறுக்கி பிடித்து அணைத்ததில்
அவளின் சிணுங்கல்கள் சிம்போனியாக
சிதறுக்கிறது..என்னுள்
அவளின் அருமையான இசையை
மீண்டும் மீண்டும்
மீட்டிக் கொண்டு இருக்கிறேன்..  என் சிம்போனியாக!

Thursday, April 09, 2009

Kamalhasan's "Unnaippol Oruvan"

கமல்ஹாசன் நடித்து வெளிவரயிருக்கும் "உன்னைப் போல் ஒருவன்" படத்தின் பிரத்யேக முன்னோட்டம். ஹிந்தி wednesday திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் கமல்ஹாசனும், மோகன் லாலும் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு "தலைவன் இருக்கிறான்" என்று முதலில் பெயர் சூட்டப்பட்டுயிருந்தது..தற்போது "உன்னைப் போல் ஒருவனாக" உருமாறி இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்கிறார்.

Saturday, February 14, 2009

Sarvam..Trailor (Tamil)..




விஷ்ணுவர்தன் யுவன் கூட்டணியில் மீண்டும் ஆர்யா நடித்து வெளிவர இருக்கும் சர்வம் படத்தின் trailor..

 

Tuesday, February 10, 2009

Superstar's Love letter for Bala's Naan Kadavul..சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் கடவுளுக்கு கொடுத்த லவ் லெட்டர்!





நன்றி : behindwoods.

Friday, February 06, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!


ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..
கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்...

முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க... இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
...கல்லூரி மாணவன்.

ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
...ஆட்டோ ஓட்டுனர்.

Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
...திரைமொழி படிக்கும் மாணவன்.

மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
...நாடக நடிகர்.

இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
...சாப்ட்வேர் எஞ்சினியர்.

இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!...சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)
தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..
கடன் வாங்கிய பக்கம் ரசனைக்காரன்

Tuesday, February 03, 2009

urakka kel thamizhinamae.. உரக்க கேள் எம் தமிழினமே!




ஈழத்தின் ரத்தத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்திக்கொள்ளும்
சிங்கள பேரினவாதத்தின்  சூழ்ச்சிகளையும்..

ஈழத்தின் வாழ்வுதனை
மீண்டும் அழிக்க
தொடங்கிய முதுகெலும்பு
இல்லாத இந்திய காங்கிரஸ்
காந்திகளின்  சூழ்ச்சிகளையும்..

இந்த ஈழத்தின்
துயரப்பாடலை கேட்டு..

அநீதியை எதிர்த்து
நியாத்தை
உரக்க கேள்
எம் தமிழினமே!

நமது இந்தியா மக்களிடம்
மட்டுமல்லமல்
உலகத்தின் மக்களிடமும்

இந்த கொடூரமான சூழ்ச்சியில்
ஈழத்தில் மடிந்துக்கொண்டு இருக்கும்
உன் தொப்புள்கொடி
உறவுக்காக..

உரக்க கேள்!
..எம் தமிழினமே!
அதுவும்  நியாத்தை
உடனே  கேள்..எம் தமிழினமே!!

என் இந்திய திராவிடமே
என் உயிரான தமிழகமே!
உன்னை நம்பி கேட்கிறேன்...

இந்திய தமிழன்!
.. இளையராஜா  

"உரக்க கேள்" சிறு அனிமேஷன் பதிவு

Monday, February 02, 2009

Beethoven Of Asia, Mastero Ilaiyaraaja - Live @ Italy





என்ன தவம்   
செய்தேனோ
உன்  இசைப்பெயரில்
நான் பிறந்ததற்கு!

எத்தனை பேர்
வந்தாலும்..போனாலும்..
உன் இசைக்காற்று
இந்த லோகத்தின்
ஐம்புலன்களில்
ஒன்றாகி விட்டதே!

நான் சுவாசித்த
நான் நேசிச்ச
முதல் உயிரான  இசை
உன்னுடையதே..

என் கடைசி முச்சும்
உன் இசையிலே முடியும்..

இவன்..
உன் இசை அடிமை..
இளையராஜா

Friday, January 30, 2009

Endhiran, The Robot Xclusive

சமிபத்தில் SSN கல்லூரியில் நடந்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டுயிருக்கும் ஷங்கரின் எந்திரன் , The Robot படப்பிடிப்பின் போது மொபைலில் எடுத்த புகைப்படங்கள்.




My favourite Commercials..என்னை கவர்ந்த விளம்பரங்கள்

இந்தியா தொலைக்காட்சி விளம்பரங்களில் எப்போதுமே ஒரு இளமை, ஒரு உணர்வு, ஒரு வாழ்கைன்னு பளிச்சென எட்டிப்பார்க்கும்.. அப்படி பலசமயம் என்னை அதனுள் தொடர்படுத்திக்கொள்வது உண்டு.. அவ்வாறு வந்த விளம்பரங்களில் என்னை கவர்ந்து.. நினைவுகளில் இன்னும் பிரியாமல் இருப்பவை..


யார் எப்படியோ எனக்கு தெரியாது.. நான் இப்படி தான் இருப்பேன்..
என் ஆசை மகளுக்கு இவ்வாறு கண்டிப்பாக ஒரு அழகான பரிசு என் வாழ்கையில் தருவேன்..அது நிச்சயம்!




எனக்கு வயதாகி விட்டது என நான் உணர்ந்தது, இது போன்ற ஒரு தருணத்தில் தான்!



கண்டிப்பாக என் மகள் இப்படி என்னை ஏமாற்ற வைப்பு இருக்கிறது!



ஆட்டமாடிய வாழ்கை இருந்தது...ஆட்டமாடபோகும் வாழ்கை..?



என் சுட்டிமகளை, பின்தொடரும் இந்த குட்டி நாயைபோல நானும் ஒரு நாள்..

Wednesday, January 28, 2009

Dabboo Ratnani's Calender 2009 | தபு ரத்னானியின் 2009 காலேண்டர்



பாலீவுட்டின் பிரபல புகைப்படக்காரர் தபு ரத்னானி பாலீவுட் நட்சதிரங்களை வைத்து எடுக்கும் புகைப்படங்கள் வருடாவருடம் காலேண்டர் வடிவில் வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தும். இந்த வருடம் வந்த தபு ரத்னானியின் 2009 காலேண்டர் இங்கு பார்த்தேன்! ரசித்தேனில்...!


தபு ரத்னானியின் 2009 காலேண்டருக்கு போஸ் கொடுத்த பாலீவுட் நட்சதிரங்கள்:
ஷாருக் கான் (Sharukh Khan), கஜோல் Kajol,அமிதாப் பச்சன்(Amitaab Bachan), இஷா தியோல் (Esha Deol),ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan), ஐஸ்வர்யா பச்சன் (Aishwarya Bachan),ப்ரீத்தி ஜிந்தா (Preethi Zinda) , பாபி தியோல் (Bobby Deol),விவேக் ஒபோராய் (vivek oberoi), ராணி முக்கர்ஜி (Rani Mukherji),அபிஷேக் பச்சன்(Abisheik Bachan), இஷா கோபிகர் (Isha Gopikar),கங்கனா ரனுட் (Kangana Ranaut) , ஷாஹீத் கபூர் (Shahid Kapoor),அஜய் தேவகன்(Ajay Devagan), தீபிகா படுகோன்(Deepika Padukone),கரீனா கபூர்(Kareena kapoor), அக்ஷய் குமார் (Akshya Kumar),கத்ரினா கைப் (Katrina Kaif), சைப் அலி கான்(Saif Ali Khan),சஞ்சய் தத் (Sanjay Dutt), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra),ரிதேஷ் தேஷ்முக் (Ritesh Deshmukh), பிபாஷா பாசு (Bipasha Basu), இம்ரான் ஹஷ்மி (Emraan Hashmi), ரியா சென் (Riya Sen),அமிஷா படேல் (Amisha Patel), குணால் கபூர் (Kunaal kapoor),அம்ரிதா அரோரா (Amrita Arora), ஹர்மன் பவேஜா (Harman Baweja), மல்லிகா ஷெரவத் (Mallika Sherawat), ரன்பீர் கபூர் (Ranbir kapoor),சோனம் கபூர் (Sonam Kapoor), நீல் முகேஷ் (Neil Mukesh),டினோ மோரியா (Dino morea), லாரா தத்தா ( Lara Dutta), ஆயிஷா தகியா (Ayesha Takia) ,சுனில் ஷெட்டி (Sunil Shetty),ஜியா கான் (Zia Khan), துஷார் கபூர் (Tushar Kapoor),ஜான் ஆப்ரஹம் (John Abraham), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty),வித்யா பாலன் (Vidhya Balan), சல்மான் கான் (Salman Khan),சுஷ்மித்தா சென் (Sushmita Sen), அர்ஜுன் ரம்பால் (Arjun Rampal),பர்தீன் கான் (Fardeen Khan), ஊர்மிளா மடோண்ட்கர் (Urmila Matondkar)

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!



கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும் பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும் இன்னொரு படம் "வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)" எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.

இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில், இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா கொலைவெறி தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.

BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும் சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.

மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின் மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய் எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான் மீதி கதை.

கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும் அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர். முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே வரைந்துள்ளனர்.

அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது படத்தின் பெரிய வெற்றி. மேலும் உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.


நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com

Tuesday, January 27, 2009

Superstar Rajinikanth's Endhiran's working stills..|சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தின் புகைப்படங்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் எந்திரன் படப்பிடிப்பு இடத்துலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. மேலும் அதிகாரப்பூர்வ படங்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது..

Tuesday, January 20, 2009

دہلی |தில்லி|दहली 6..trailorகளும் பாடல்களும்..

ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மேஹ்ராவின் தில்லி 6 படத்தின் trailorகளும் பாடல்களும்.. படத்தில் அபிஷேக் பச்சன், சோனம் கபூர், ஓம் புரி, ரிஷி கபூர், வஹிதா ரஹ்மான், அதுல் குல்கர்னி மற்றும் திவ்யா தத்தா நடித்த இந்த படத்துக்கு ரஹ்மான் இசையமைதிருகிறார். படம் பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ளது..

நான் தில்லியில் இருந்தபோது அடிக்கடி சுற்றி திரிந்த இடங்கள் பராட்டா வாளி கலி.. சாந்தினி சோவ்க்..ஜம்மா மஸ்ஜித்..Connaught Place..இந்தியா கேட் என நான் ரசித்த என் தலைநகரம் தில்லி.. என் எதிர்கால லட்சியமும் தில்லி தான்..தில்லி 6 காட்சிகளில்..

trailor1


trailor2



பாடல்கள்..



Delhi 6

Monday, January 19, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!



கலைஞனுக்கு ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும் கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன் கலை வல்லமையின் வாயிலாக கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.

அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ் ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே Slumdog Millionare ராக படம் பித்து, உலகின் கவனத்தை ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!


இந்தியா எப்போதுமே இப்படி வறுமையான வாழ்வியலையும் கொண்டது தான் என்று இந்த படம் நேரடியாக உலகுக்கு உரக்க சொன்னாலும், இந்த படத்தின் மூலம் இந்தியாவின் கலை திறமையும், கலாசார ரசனையும் மீண்டும் மேற்கத்தியவர்கள் பரவலாக ரசிக்க தொடங்கிவிட்டனர் என்றும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே பார்வை கோளாறு.. அவர்களின் பார்வைகள் அப்படி தான்..

அதை விட்டு விட்டு, அவர்கள் போட்டு கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள் முயற்சி செய்தால், இன்று கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.

கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன், எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி பதில் அளிக்கிறான் என்பது தான்.


இந்நிகழ்ச்சியில் எப்போதுமே பங்கேற்கும் போட்டியாளரும், பார்வையாளர்களும் படபடத்து போய் காண்பது போட்டியின் வாடிக்கையான விஷயம், ஆனால் படத்தில் தொகுப்பாளர் ஜமாலின் பதில்களை கண்டு அதிர்ச்சியில் தத்ருபமாக உறைந்து படபடக்கிறார்.

ஒரு கட்டத்தில் கால் சென்டரில் டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது! என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.


விசாரணையில் அவன் விவரிக்கும் சம்பவங்களும்.. கொடுமையான அனுபவங்களும்.. அவையனைத்தும் நிகழ்ச்சியின் சாதரண கேள்வி பதில்களுக்குள் எதிர்பாராமல் சிக்கி இருப்பதையும், அந்நிலையிலும் உண்மையை எனும் ஒரே உடமையை தாங்கி அவன் வாழ்ந்திருப்பதையும் உணர்ந்த காவல்துறை அதிகாரி கான், ஜமாலை விடுதலை செய்கிறார்.

விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி, மீண்டும் நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே மட்டுமல்லாது இந்தியாவே டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது… டிராபிக் சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு அவனின் சமுதாய அடையாளங்களான சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!

மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.


ஜமால் ..இந்த கதாபாத்திரத்தை தாங்கி வாழ்ந்த சிறுவர்கள் அனுஷ், தனே ஹேமந்த் முதல் இளைஞர் தேவ் படேல்வரையிலான நடிகர்கள் என்று சொல்லுவதே தவறு!…அனைவரும் மனதில் இணைந்தே விட்டார்கள்.. அவர்கள் காட்டிய ஏக்கம், சோகம்,சிறுவயதிலிரிந்தே லத்திகாவின் மீது இழையோடிய காதல், அண்ணனின் தூரோகத்தை மன்னிக்காத வேகம், காவல் துறை அதிகாரியிடம் சிக்கி சித்தரவதை படும் வேதனை, கடைசியாக தொகுப்பாலரின் கேள்விகளை எதிர்கொளும் நம்பிக்கை என் அடுக்கிக்கொண்டே போகலாம்… அவர்கள் வெளிக்காட்டிய எண்ணற்ற உணர்வுகுகள் நம்மை ஜமாலுக்கு ஆதரவாக கதைக்குள் கட்டி போடுகிறது.


அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள் ருபினா அலி, தன்வி கணேஷ், பிரெய்தா பின்டோ மூவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு முறையும் சிதைந்து மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .

அடுத்து அண்ணன் சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்) சின்ன வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும், பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!

இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட் மென்ட்லின் ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும் தான் மேற்கத்தியவர்களிடம் அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும் ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.

SlumDog Millionare..

திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன் அமர வைத்து விடுக்கிறது..


படமே விசாரணையில் தொடங்குவதால், ஜமால் தான் பதிலளித்த பின்னணியை சொல்லும் போது.. அனைத்து பதில்களுக்கும், அவன் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வை நோக்கி, non linear narative என்ற திரை மொழியின் கிளை காட்சிக்குள் புகுந்து, அவனின் ஒவ்வொரு அனுபவத்தையும் சொல்ல பயணிக்கிறது சிமோன் பியூபோவின் அருமையான திரைக்கதை. அதனை டாக்குமென்றி பாதிப்பில் உண்மையாக நடந்தேறி இருக்கும் என்ற நம்பும் தோணியில், சில உண்மையான மும்பை கலவரங்களையும் சேர்த்து காட்சிகளில், சேரி வாழ்வியலையும், அதன் பாதிப்புகளையும், நிகழ்கால கேள்வி பதில் நிகழ்ச்சியோடு இணைத்து காட்சியாக வரைந்திருக்கிறார் இயக்குனர் டேனி பாயல்.


மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!

பார்த்தேன்! ரசித்தேன்!!



அருந்ததி..தெலுங்கில் திரை உலகில் வெகு நாளைக்கு பிறகு கதாநாயகியை மையமாக கொண்ட கதையுடன் வெளிவந்துள்ளது இப்படம். நடிகை அனுஷ்கா நடித்து, பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கி, அம்மன், இது தண்ட போலீஸ் போன்ற வெற்றி படங்களை எடுத்த ஷ்யாம் பிரசாத் ரெட்டி தயாரித்த இந்த படம் ஆந்திராவில் அதிக எதிர்பார்ப்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.

அருந்ததி..பழங்கால முன் ஜென்மம் பழிவாங்குதல் கதை தான் என்றாலும், Firefly நிறுவனம் பணியாற்றிய படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்! ஆந்திராவில் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து வருகின்றனர்...விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.

அருந்ததி..trailor உங்கள் பார்வைக்கு!


முக்கியமான விஷயம் என்னன்னா....இந்த படத்துக்கு விளம்பரம் கொடுக்க இந்த trailor-ரை போடல.. காரணம் ஒன்னு தான்...செல்லம் அனுஷ்கா தான்..

Thursday, January 15, 2009

என் இசை மனதில் இன்று..

ஏ ஆர் ரஹ்மான் கோல்டன் க்லோப் விருதை பெற காரணமாய் இருந்த slumbdog millionaire திரைப்படத்தின் பாடல்கள்..


Listen_Slumdog Millionare


வாழ்த்துகள் ரஹ்மான்!

Tuesday, January 13, 2009

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

Thursday, January 08, 2009

flickr கதைகள்

போன வருடம் டிசம்பர் கடைசி வாரம், என் அக்காவின் தயவில் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சௌத் கோஸ்ட் கடற்கரைகளை சுற்றிபாற்கும் போது இயற்கையிடமிருந்து நான் சுட்டது!




அன்புடன்,
அகத்திரை

மேலும் சுட்டவைகள்.. www.flickr.com/photos/agathirai

மசக்கலி & மேரா டெல்லி / मेरा दिल्ही in Delhi 6 teaser



ரஹ்மான் இசையமைத்த மசக்கலி எனும் வரப்போகும் ரங்தே பசந்தி புகழ் இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மேஹ்ராவின் டெல்லி 6 ஹிந்தி படத்திலிருந்து சமீபத்தில் ரசித்தது!

English:
Recently tempted to Rahman's Masakali video promo song from Rakeysh Omprakash Mehra's Delhi 6

Wednesday, January 07, 2009

என் காதல் டூயட்..பூங்கற்றிலே!

எனக்கு பிடித்த விஷயங்களில் பாடுவதும் ஒன்று! Don Boscoவில் படித்ததில் முதற்கொண்டு காலேஜ் வரை மேடையில் பாடி வந்தேன். பலர் பாராட்டிய பாடகனாக அல்ல!.. பலர் ரசித்த பாடகனாக!


ஹிந்தி Dil se படத்தில் ai ajanbi பாடல்

இசைஞானி இளையராஜாவின் குரலை அப்படியே பிரதி எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கினேன் பாடுவதை, அதற்கு காரணம் என் உயிர் நண்பன் ராமலிங்கம்(என்னை காட்டிலும் பாடுவதில் திறமைசாலி). அவன் பாடுவதை ரசித்து பார்த்து பாட அரம்பித்ததுதான்!

நான் இசைஞானியின் குரலில் பாடிய என் மனதுக்கும் பிடித்த, பலரும் என்னை ரசித்த பாடல்கள் என்றால்..அவை ..

அவதாரத்தில்.. தென்றல் வந்து தீண்டும் போது!
தேவர்மகனில்.. இஞ்சி இடுப்பழகே!
மன்னனில்... அம்மா என்றழைக்காத!
நாயகனில்.. நில அது வந்து மேலே!
காதலுக்கு மரியாதையில்.. என்னை தாலாட்ட வருவாளா!

கடைசியாக
என்னில் இணைந்த பாடல் என்றால்.. பூங்கற்றிலே! உயிரே படத்திலிருந்து!

இசைஞானியின் பரம வெறியனாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக ரஹ்மானை ரசிக ஆரம்பித்தது அப்போது தான்!

காரணம் காதல்!

எல்லோருக்கும் (குறிப்பாக காதலர்களுக்கு) ஒரு காதல் டூயட் கண்டிப்பாக இருக்கும். நூற்றுக்கு 90% சதவிகிதம் சந்தோஷமான பாடல்களை மனதில் தேர்தெடுத்து கனவிலே டூயட் பாடியிருப்பார்கள். நானும் அப்படி தான்..

என் காதல் டூயட் பூங்கற்றிலே!


தமிழ் உயிரே படத்தில் பூங்கற்றிலே பாடல்!

எனக்கு என்னவோ தெரியவில்லை காதல் ஒருவனை வந்தடையாத வேதனையை சொல்லும் இந்த பாடல் தான் ஆரம்பம் முதலே என்னை 'பற்றி'க்கொண்டது. வேதனையும் காதலில் சுகம் தானே!

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..

இரண்டாம் ஆண்டு கல்லூரி இறுதியில் நடந்த culturalசில் எல்லோரும் இசை இல்லாமல் வெறும் குரலில் பாடிய நேரத்தில், நான் உயிரே படத்தின் ஒரிஜினல் மைனஸ்(karokae) trackக்கு, பூங்காற்றிலே பாட்டை தமிழிலும் ஹிந்தியிலும் கலந்து பாடினேன்!

காதல் வேதனையின் தன்மையை ஜாவேத் அக்தரும், வைரமுத்துவும் எழுதிய வரிகளில் ஹிந்தியில் ai ajanbiயை பாடிய உதித் நாராயணனும், தமிழில் பூங்கற்றிலேவை பாடிய உன்னி மேனனும் அந்தந்த மொழி பாடலில் வாழ்ந்தே இருப்பார்கள்! அவர்களை போல் இல்லையென்றாலும் நான் என் காதலை என் பாணியிலேயே வெளிபடுத்தினேன்!

பாடலை பாடப்பாட எல்லோரையும் கவனித்துக்கொண்டே குறிப்பாக மகேசன் அய்யா, தமிழ்குமார், செல்வின், கபீர், பிரகாஷ், செல்வகுமார் மற்றும் ஜூனியர் நண்பர்கள் என எல்லோரின் முகத்திலும் வெளிப்பட்ட சந்தோஷ சபாஷ்களுடையே..அந்த கொஞ்ச நேரம்..அந்த வேதனையில் நானும் வாழ்தேன் என்று தான் சொல்ல வேண்டும்!

எல்லா கலைஞர்களும் எதிர்பார்க்கும் ஒரே அவார்ட்.. கைதட்டல்! எனக்கும் நிறையவே கிடைத்தது! கூடுதலாக என் காதலியின் கண்களிலே கண்ணிர்! எனக்கு கிடைத்த அல்ல என் காதலுக்கு கிடைத்த மிக பெரிய அவார்ட் அது தான்..
அந்த நேரம் காதல் இருந்தும் நாங்கள் இருவரும் காதலை நேரடியாக பகிர்ந்துக்கொள்ளாத தருணம்!

பிறகு காதலால் சேர்ந்தாலும், சமுதாயத்தால் பிரிக்கப்பட்டது எங்கள் காதல்! அதற்கு என் காதலியின் மீது எந்த தவறுமில்லை! அவள் எனக்கு கிடைக்காதது என்பது நான் கொடுத்து வைக்காதது என்பது மட்டும் தான் காலம் எனக்கு கொடுத்த நீங்கா வேதனை!

எது நடந்து விட்டாலும், எது இருந்தாலும் இன்றும் அவளுக்கும் , எனக்கும் மறக்க முடியாதது பூங்காற்றிலே பாட்டு!

இப்போது காதலியும் இல்லை
அந்த காதலும் இல்லை

ஆனால்

உயிரை வேரோடு கிள்ளி..
என்னை செந்தீயில் தள்ளி..
எங்கே சென்றாயோ கள்ளி?
ஓ! என் ஜீவம் ஓயுமுன்னே.. ஓடோடி வா!

என்ற வரிகளில் உணர்வுகளின் உச்சிக்கே சென்ற
நினைவுகள் இன்னும் இருக்கிறது
கண்டிப்பாக இந்த சராசரிக்கும்!
..நினைவிருக்கும் வரை!

கண்ணீருடன்.. ஒரு idiot!

Tuesday, January 06, 2009

..எழுதினேன்! ..(பதிவு எண் 6)

From Ilayaraja.v's Flickr

புத்தரின் பெயரால்?..

ஈழத்தில் சிந்தி
கொண்டு இருக்கும்
ரத்தங்களை கண்டு
நானும் உறைந்து
சிலையானேன்
மௌனமாக!

ஆங்கிலத்தில்
I'm enlightened!
புத்தா!

Saturday, January 03, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை பாருங்கள்!

இசைஞானியின் இசைவரத்தில்..
நான் கடவுள்
திரைப்படத்தின் பிண்ணணி இசை சேர்ப்பு!




நன்றியுடன் நான் கடன் வாங்கிய பக்கம்..www.kollywoodtoday.com

Friday, January 02, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!

From rasanaikaran


மார்க் போடுவதெல்லாம் படித்த மேதாவி மடையர்களின் வேலை..

தாயின் தாலாட்டுக்கு மார்க் போட முடியுமா என மீண்டும் உயிரெடுக்கும் உணர்வான
இளையராஜா alias இசை!

படம் .. நான் கடவுள்!

நீண்ட இடைவேளிக்கு பிறகு மனதுருக கண்கள் ஈரம் பார்க்க வைக்கும் இசை!

சாதனா சர்கம்மும், மதுமிதாவும் உயிர் தந்த அம்மா..மாத மணிக்கோயில் முதலிய இரு பாடல்களும் ஒரே உணர்வில் உருவான இசை என்றாலும் மனதை மயக்கி வேறுபடுகின்றன!

அதே போல் ஸ்ரேயா க்கோசல் பாடிய கண்ணில் பார்வையும், இசைஞானி உயிரூட்டிய ஒரு காற்றில் பாடல்களும் ஒரே இசையின் வடிவம். இசைஞானி தன் பாடகர்களுக்கு திடீரென test வைப்பாராம். அவ்வாறு இந்த கடினமான பாடலுக்கு பரிட்சை எழுதி தேர்வானவர் ஸ்ரேயா க்கோசல் என கேட்கும் போது உணரலாம்!

அருமையான பாடல்! இதே பாடல்..இசைஞானி பாடும் போது தாலாட்டுகிறது.. பெற்ற தாயின் அன்பின் உயரத்துக்கு ஈடு ஏது என உணர்த்தும்!

பிட்சை பாத்திரம்.. தன் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் என அரைவேக்காடுகள் கூறுகின்றன! ராஜாவின் ரமணமாலையில் வந்த பழைய பாடலும், நான் கடவுளில் மறுபிறவி எடுத்து வந்த புதிய பாடலும் இசையின் இறவா வரம்!

கடைசியாக ஓம் சிவ ஓம்!
இதை கேட்ட வடநாட்டு சாமியாரின் கண்களில் நீர் வழிந்ததாக ஆனந்த விகடனில் வெளிவந்த நான் கடவுளின் பிரத்தேயகப் பேட்டியில் படித்தேன். இந்த பாடலை கேட்ட பிறகு என் கண்களிலும் நீர் தாரையெடுத்தது பல ஆண்டுகளுக்கு பிறகு!

எதோ வார்த்தைகளில் சொல்லயியலாத பாடல்! உயிரை உலுக்குகிற இசை என மனதை சஞ்சலப்படுத்துகிறது!

அதானே இசைஞானி நமக்காக வாங்கி வந்த வரம் என மீண்டும் உணர்த்தும் நான் கடவுளின் இசை!

இப்படிக்கு..

அன்புடன்
தர டிக்கெட்!

நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com
Related Posts with Thumbnails